தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு.
சென்னையில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் 6 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டது என்ன வென்றால், " தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியது. அது நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. மிகுந்த வலுப்பெற்ற இந்த மண்டலமானது சென்னையில் இருந்து கிழக்கு, தென் கிழக்கில், 670 கி.மீ., தொலைவில் மையம் கொண்டு உள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதியை நாளை நெருங்கும். இதனால் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இன்று தமிழகத்தை பொறுத்த வரை - விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும். நாளை திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலுார் மாவட்டங்களைத் தவிர ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
கடலோர பகுதியின் தகவல் - தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதி, ஆந்திரா கடலோர பகுதி, இலங்கை கடலோர பகுதி, தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில், இன்றும், நாளையும் மணிக்கு, 55 கி.மீ வேகத்திற்கு சூறாவளி காற்று வீசும். இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…