சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் அவசர கட்டுபாட்டு மைய்யத்தில் மாண்டஸ் புயல் எதிரொலியாக தலைமை செயலாளர் இறையன்பு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
.
மாண்டஸ் புயல் இன்று இரவு 11.30 மணி முதல் நாளை அதிகாலை 2.30 மணி வரை கரையை கடக்கவுள்ள நிலையில் மிக கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்னென்ன என்பது குறித்து கட்டுப்பாட்டு மையத்தில் அதிகாரிகளிடம் தலைமைச் செயலாளர் இறையன்பு கேட்டறிந்தார்.
பின்னர் செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலி காட்சி வாயிலாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டார் அவர், தாழ்வான பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும் அறிவுரை வழங்கினார்.
மேலும் புயல் கரையை கடக்கின்ற நேரத்தில் முழு வீச்சில் தடுப்புப் பணிகளையும் அனைத்து அரசு இயந்திரங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
அப்போது உடன் பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் ஆகியோர் தலைமை செயலாளர் இறையன்பு உடன் இருந்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…