Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

#Breaking மாணவர்களுக்கு குஷியான செய்தி... நாளை இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! 

Kanimozhi Updated:
#Breaking மாணவர்களுக்கு குஷியான செய்தி... நாளை இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! Representative Image.

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும், தஞ்சையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் இருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ள தாழ்வு மண்டலமானது 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை காலை புயலாக உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன்பு எச்சரித்துள்ளது. புதிதாக உருவாக உள்ள புயலுக்கு மாண்டோஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

இந்த புயலானது மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்பதால் கடலோர பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே தமிழகத்தின் சில மாவட்டங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாளை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மட்டும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் எதிர் நோக்கும் பலத்த காற்று மற்றும் அதிக மழை காரணமாக மாணவர்கள் நலன் கருதி நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்