சென்னை: மேற்கு திசை காற்று காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் நான்கு நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மத்திய அரபிக் கடல் பகுதியில் நிலைக் கொண்டிருந்த பைபோர்ஜாய் புயல் நேற்று காலை முதல் கோவாவின் வடமேற்கே பகுதியில் சுமார் 700கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இது மேலும் வலுப்பெற்று அடுத்த மூன்று நாட்களில் வடமேற்கு திசையில் நகரக் கூடும். இந்நிலையில் மேற்கு திசைக் காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று முதல் வரும் 14ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலையை பொருத்தவரையில் அதிகப்பட்சமாக 40டிகிரி செல்சியஸூம், குறைந்தப்பட்சமாக 29-30டிகிரி வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…