ஐபி எனும் இந்தியாவின் உள்நாட்டு உளவுப் பிரிவின் புதிய தலைவராக தபன் குமார் தேகா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது பொறுப்பில் உள்ள அரவிந்த் குமாரின் பதவிக்காலம் நிறைவடைவதை ஒட்டி இந்த அறிவிப்பு வந்துள்ளது.
தற்போது ஐபியில் சமூக இயக்குநராகப் பதவி வகித்து வரும் தேகா, தனது பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், ஜூன் 30ஆம் தேதி இயக்குநராகப் பொறுப்பேற்கிறார். அவர் பதவி ஏற்ற நாளிலிருந்து இரண்டு ஆண்டுகள் அல்லது மறு உத்தரவு வரும் வரை (எது முந்தையதோ) அந்த பதவியில் இருப்பார்.
மேலும் வெளிநாடுகளில் உளவு வேலை பார்க்கும் இந்திய உளவுப் பிரிவான ரா அமைப்பின் தலைவர் சமந்த் குமார் கோயல் ஜூன் 30, 2023 வரை ஒரு வருட கால பணி நீட்டிப்பை பெற்றுள்ளார்.
இதற்கிடையே பஞ்சாப் டிஜிபியாக இருந்து ஓய்வு பெற்ற தினகர் குப்தா, என்ஐஏவின் இயக்குனர் ஜெனரலாக நேற்று நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…