Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழகத்தில் டாஸ்மாக் ஏலம்... முந்தியடிக்கும் ஆளும் கட்சியினர்...

Muthu Kumar July 28, 2022 & 13:00 [IST]
தமிழகத்தில் டாஸ்மாக் ஏலம்... முந்தியடிக்கும் ஆளும் கட்சியினர்...Representative Image.

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு ஏலம் விடப்படுவதாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் ஏலம் விடுவது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை அணைத்து மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பபட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் உள்ள 30 மாவட்டங்களுக்கு மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்களுக்கான ஒப்பந்ததாரர் தேர்வு செய்ய வேண்டி அறிவுறுத்தப்பட்டு, முறையே இரண்டு வரு டங்களுக்கான ஒப்பந்ததாரர் இறுதி செய்யப்பட்டு மதுக்கூடங்கள் செயல்பட்டு வருகிறது.

மேலும், மதுக்கூட ஒப்பந்தம் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள 8 மாவட்டங்கள் அதாவது சென்னை வடக்கு, தெற்கு, மத்திய, காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, கிருஷ்ணகிரி மற்றும் அரக்கோணம் போன்ற மாவட்டங்களுக்கு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டப்படி புதிய ஒப்பந்ததாரரை தேர்வு செய்திடவும் மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, டாஸ்மாக் பார் ஏலத்தை நேர்மையான முறையில் நடத்த வேண்டும் என தமிழக டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பரசன் கோரிக்கை வைத்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்