Tamilnadu News Live : தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் தற்போது உள்ள காலியிடங்களுக்கான தகுதித் தேர்வு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வை 2,30,000 பேர் எழுத விண்ணப்பித்துள்ளனர். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு 15 நாட்களுக்கு முன்னதாக பயிற்சி தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வு அட்டவணைகள் மற்றும் ஹால்டிக்கெட் குறித்த அடுத்தகட்ட அறிவிப்பு ஆகஸ்ட் 2ம் வாரத்தில் தெரிவிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…