Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாணவிகளின் நடையை ஆபாசமாக வர்ணித்த ஆசிரியர்...போட்டுக்கொடுத்த மாணவன்..!

madhankumar August 11, 2022 & 17:38 [IST]
மாணவிகளின் நடையை ஆபாசமாக வர்ணித்த ஆசிரியர்...போட்டுக்கொடுத்த மாணவன்..!Representative Image.

ஆசிரியர் ஒருவர் மாணவர்களை காதலிக்க வேண்டிய வயதில் காதலிக்க வேண்டும் என வகுப்பறையில் மாணவர்களிடம் கூறியதோடு, காதல் ஒன்றும் குற்றமல்ல என்றும் மாணவிகளுக்கு காதல் கடிதம் கொடுங்க என தூண்டுவது வைரலாகி வருகின்றது.  

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அதில் பத்தாம் வகுப்பு ஆசிரியராக ஒருவர் பணியாற்றி வருகிறார். அடுத்த மாதம் அவர் ஓய்வுபெற உள்ள நிலையில் தன்னிடம் படிக்கும் மாணவர்கள் காதலிக்க வேண்டும் என அவர் கூறி வந்துள்ளார். அது அதை செய்யவேண்டிய வயதில் செய்துவிட வேண்டும், இது காதலிக்க வேண்டிய வயது. இந்த வயதில் காதலிக்காமல் எப்போது காதலிக்க போகிறீர்கள்? எனவே மாணவிகளுக்கு மாணவர்கள் லவ் லெட்டர் கொடுங்கள் கூறியுள்ளார்.

மேலும் மாணவிகளின் நடையை ஆபாசமாக வர்ணித்து மாணவர்களிடமே கூறியுள்ளார். ஆசிரியரின் இந்த இழிசெயலை பொறுக்கமுடியாமல் ஒரு மாணவன் பெற்றோர்களிடம் புகார் கூறியுள்ளார். இதனையடுத்து பெற்றோர் தலைமையாசிரியரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.  இதில் ஆசிரியரின் வக்கிர செயல் உறுதியானதால் கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் போலீசாரிடம் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்  தான் ஓய்வு பெறும் நேரத்தில் தன் மீது புகார் அளித்தால் நிச்சயம் உங்கள் பெயர்களை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என ஆசிரியர் மிரட்டி வருவாதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுள்ளது..


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்