கன்னியாகுமரி அருகே முன்னாள் காதலனின் மிரட்டலுக்கு பயந்து கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் சூழிகோணம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் அதே பகுதியை சேர்ந்த திவ்யா என்ற கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ரஞ்சிதின் நடவடிக்கைகள் பிடிக்காத காரணத்தால் ரஞ்சித் உடனான தொடர்பை துண்டித்துள்ளார் மாணவி திவ்யா. இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித் மாணவி செல்லும் இடமெல்லாம் சென்று லவ் டார்ச்சர் செய்து வந்துள்ளார். மேலும் மாணவி மற்றும், ரஞ்சித் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக இரு தரப்பையும் அழைத்து விசாரித்த காவலர்கள், இருவரையும் பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். ஆனால் அடங்காத ரஞ்சித், மீண்டும் பின் தொடர்ந்து லவ் டார்ச்சர் கொடுத்துள்ளார். இதனையடுத்து திவ்யாவின் சகோதரன் ரோஷன் மேத்தியூ அவரது நண்பர்களுடன் ரஞ்சித்திடம் சென்று தட்டி கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித் தனது மணல் கடத்தல் நண்பர்களோடு இணைந்து அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளார்.
ரஞ்சித்தின் தொடர் லவ் டார்ச்சரால் மன உளைச்சலில் இருந்த மாணவி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மாணவியின் தற்கொலைக்கு காரணமாக ரஞ்சித்தை கைது செய்யும் வரை உடலை வாங்கப்போவதில்லை என அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் தற்கொலைக்கு காரணமாக நபரை கைது செய்யாமல் தங்களுக்கு உதவியை பக்கத்து வீட்டுக்காரரை கைது செய்துள்ளதாக திவ்யாவின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…