Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆசைஆசையாய் சாக்லேட் வாங்கி வந்த தந்தை.. சாப்பிட்ட சிறுவன் பலி!!

Sekar Updated:
ஆசைஆசையாய் சாக்லேட் வாங்கி வந்த தந்தை.. சாப்பிட்ட சிறுவன் பலி!!Representative Image.

தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் சாக்லேட் சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வாரங்கல் பகுதியை சேர்ந்த கங்கன் சிங் என்பவர் தனது மகனுக்கு வெளிநாட்டில் இருந்து சாக்லேட் கொண்டு வந்துள்ளார். 8 வயது சந்தீப் சாக்லேட் சாப்பிட்டபோது, அது தொண்டையில் சிக்கியது. சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், 2-ம் வகுப்பு படிக்கும் சந்தீப், வீட்டில் இருந்து சில சாக்லேட்டுகளுடன் சனிக்கிழமை பள்ளிக்கு சென்றுள்ளார். சாக்லேட்டை சாப்பிட்டதும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. 

இதுகுறித்து ஆசிரியர் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தார். இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. மூச்சுத்திணறல் தான் மரணத்திற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சந்தீப்பின் தந்தை கங்கன் சிங் வாரங்கலில் எலக்ட்ரிக் கடை நடத்தி வருகிறார். இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தானில் இருந்து இங்கு வந்தார். அவருக்கு நான்கு குழந்தைகள். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றிருந்த அவர், அங்கிருந்து தனது குழந்தைகளுக்கு சாக்லேட் கொண்டு வந்துள்ளார். இந்த சாக்லேட்டுகளில் சிலவற்றை சந்தீப் பள்ளிக்கு எடுத்துச் சென்றார், சாப்பிட்ட பிறகு அவர் இறந்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்