Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tamilnadu News Live : தற்காலிக ஆசிரியர்கள் பணியில் சேரவேண்டும்... பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...

Muthu Kumar July 11, 2022 & 20:00 [IST]
Tamilnadu News Live : தற்காலிக ஆசிரியர்கள் பணியில் சேரவேண்டும்... பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...Representative Image.

Tamilnadu News Live : தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் ஜூலை 20-ஆம் தேதிக்குள் பணியில் சேர வேண்டும் என பள்ளிக்கல்வி துறை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பில், “தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பிறகு ஆசிரியர்கள் தேர்வு செய்ய வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜூலை 15-ஆம் தேதிக்குள் தகுதியானவர்களை தேர்வு செய்ய அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

மேலும், தேர்வானவர்கள் பட்டியலை சரிபார்த்து ஜூலை 18-ம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தேர்வானவர்கள் ஜூலை 20-ம் தேதிக்குள் பணியில் சேர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்