Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இலங்கை அதிபர் தப்பியோட்டம்...உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியீடு..!

madhankumar July 11, 2022 & 19:02 [IST]
இலங்கை அதிபர் தப்பியோட்டம்...உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியீடு..!Representative Image.

இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக அதிபர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது, அதில் ஆயிரக்கணக்கில் மக்கள் கலந்துகொண்டு அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு அதனை கைப்பற்றினர். அங்குள்ள நீச்சல் குளங்களில் குளித்தும், அதிபர் படுக்கை அறையின் படுத்து, அங்குள்ள டிவியை பார்த்தும் பல்வேறு அட்டகாசங்களில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் மாட்டிக்கொண்டால் சிக்கல் ஆகிவிடும் என நினைத்த அதிபர் கோத்தபய ராஜபக்ஷே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இலங்கையை விட்டு தப்பியோடியதாக தகவல் வெளியாகின. இது உறுதிப்படுத்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது குடும்பத்துடன் வேறு நாட்டிற்கு அவர் தப்பியோடியுள்ளதாகவும் இன்னும் சிறிது நாட்கள் கழித்து நாடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்