பீகார் மாநிலம் மாதே பூரா பகுதியை சேர்ந்த முகமது அம்ரேஸ் என்பவர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், பந்திப்போராவில் உள்ள சோத்னாரா சம்பல் பகுதியில் பயங்கரவாதிகள் நேற்று நள்ளிரவு மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து, நேற்று இரவு நடத்திய துப்பாக்கி சூட்டில் பீகார் தொழிலாளி முகமது அம்ரேஸ் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார். இதனையடுத்து, அவரை உடனே அருகில் உள்ள மருத்துவமணையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், இந்த தகவலை காஷ்மீர் மண்டல காவல்துறையினர் தங்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…