உத்தரப்பிரதேசம் மாநிலம் மசூரியில் 16 வயது சிறுவன் தனது நண்பனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான விசாரணையில், செல்லும் கார்களை வேடிக்கை பார்க்கலாம் என விரைவு சாலைக்கு அழைத்து சென்று கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். பின்னர் பீர் பாட்டில் மூலம் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். அச்சிறுவனின் உடலை அருகில் இருந்த புதரில் வீசிவிட்டு தப்பிச்சென்றார்.
இதனையடுத்து, உயிரிழந்த சிறுவன் அதே பகுதியை சேர்ந்த 7ஆம் வகுப்பு பயிலும் மாணவர் என தகவல் கிடைத்துள்ளது. மேலும், இது குறித்து கொலை செய்த சிறுவனை பிடித்து விசாரணை நடத்திய போது, தன்னை படிக்க சொல்லி வற்புறுத்தியதால் சிறைக்கு சென்றால் படிக்க தேவையில்லை என கொலை செய்ததாக கூறியுள்ளார்.
மேலும், இந்த கொலை செய்ட்வதற்க்காக பல திரைப்படங்கள் பார்த்து 5 மாதம் இந்த கொலைக்கு சதி திட்டம் தீட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…