Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Crime : குடும்பத் தகராறில் குடும்பத்தை கொளுத்திய முதல் மனைவி..!

Muthu Kumar May 14, 2022 & 21:59 [IST]
Crime : குடும்பத் தகராறில் குடும்பத்தை கொளுத்திய முதல் மனைவி..!Representative Image.

Crime : பீகார் மாநிலம் ப்ரவுல் நகரில் குடும்பத் தகராறில்  மொத்த குடும்பத்தையும் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

பீகார் மாநிலம் ப்ரவுல் நகரில் வசித்து வரும் முகமது குர்ஷித் ஆலம் என்பவர் குல்ஷன் காதுன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடந்து பல ஆண்டுகள் கடந்தும் இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் 2 ஆண்டுகளுக்கு முன் ரோஷன் காதுன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து அவருடைய இரண்டாவது மனைவி ரோஷன் காதுன் கர்ப்பமாக இருந்தார்.

மாமியார் தகராறு

இந்நிலையில் முதல் மனைவிக்கு இரண்டாவது மனைவி மீதும் அவரது மாமியார் ஜுபைதா காது மீதும் கோபம் இருந்து வந்தது. இதனால் இவர்களுக்கு இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

வெடித்த தகராறு

இந்நிலையில், இன்று காலை ஏற்பட்ட குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்த முதல் மனைவி, தன் மீதும், குடும்பத்தினர் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டார். இச்சம்பவத்தில் மாமியாரும் 2வது மனைவியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடந்த முதல் மனைவி மற்றும் அவருடைய கணவருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர்களும் உயிரிழந்தனர்.

வழக்குப்பதிவு 

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விசாரணைக்காக தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

குடும்பத் தகராறில்  மொத்த குடும்பத்தையும் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்