இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் மேகவெடிப்பு ஏற்பட்ட நிலையில், கனமழை பெய்து வருகிறது. இதனால் மீண்டும் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி, குலு, சம்பா ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை காரணமாக பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, காங்க்ரா மாவட்டத்தில் கரை உரண்டு ஓடும் வெள்ளத்தால் அப்பகுதி ஆற்றின் நடுவே அமைந்துள்ள ரயில்வே பாலம் இடிந்து விழுந்துள்ளது.
மேலும், தொடர் கனமழை காரணமாக மண்டி, குலு ஆகிய மாவட்ங்களில் உள்ள அணைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…