குஜராத் கேடா மாவட்டத்தில் நவராத்திரி கர்பா நிகழ்ச்சியில் கற்களை வீசி எரித்ததாக சில இஸ்லாமியர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பிறகு அவர்களை காவல் துறையினர் கம்பத்தில் கட்டிவைத்து பிரம்பால் அடித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த மக்களும் அதனை தடுக்காமல் கைதட்டி ரசித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் இருந்து எந்தவித விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை பற்றி உள்ளூர் நியூஸ் சேனல் தெரிவித்தது என்ன என்றால், அந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு அருகில் மசூதி ஒன்று இருக்கிறது. எனவே, அங்கு நவராத்ரி நிகழ்ச்சி நடக்கக்கூடாது என்னும் நோக்கத்தில் இஸ்லாமியர்கள் கற்களை எரிந்து பிரச்சனை செய்ததாக தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…