Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கடைசி வெள்ளை புலி உயிரிழப்பு....சோகத்தில் ஆழ்ந்த பொதுமக்கள்..!

madhankumar July 11, 2022 & 19:50 [IST]
கடைசி வெள்ளை புலி உயிரிழப்பு....சோகத்தில் ஆழ்ந்த பொதுமக்கள்..!Representative Image.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இயங்கி வரும் நஹர்கர் பூங்காவில் வெள்ளைப் புலி உடல்நலக் குறைவால் பலியான சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் சீதா, ராஜா என்று பெயர் சூட்டப்பட்டு வளர்க்கப்பட்ட 2 வெள்ளைப் புலிகள் உடல்நலக்குறைவால் கடந்த மூன்று ஆண்டுகளில் அடுத்தடுத்து உயிரிழந்துவிட்டது. இதனால் உயிரியல் பூங்கா உள்ளிட்ட இயற்கை ஆர்வலர்கள் கவலை அடைந்தனர்.

அவற்றை தொடர்ந்து தற்போது இப்பூங்காவில் ஒரே ஒரு வெள்ளை புலி வளர்ந்து வந்தது. அதன் பெயர் ‘சீனோ’ இதற்கு வயது 6. கடந்த சில நாட்களாக 'சீனோ' சிறுநீரகத் தொற்றால் அவதிப்பட்டு இருந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல், பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் பூங்கா ஊழியர்கள் சரியாக புலிகளை கவனிக்காததால் தான் இந்த பிரச்னை என புகார் தெரிவித்துவருகின்றனர்,


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்