Japan Trending News : ஜப்பானை சேர்ந்த டோகோ eன்பவர் மனிதனாய் வாழ்வதை வெறுத்து நாயாக மாறியுள்ளார்.
விசித்திர ஆசை
விலங்குகள் மீது ஆர்வம் கொண்ட ஜப்பான் நாட்டை சேர்ந்த டோகோ என்பவருக்கு நீண்டகாலமாக விசித்திர ஆசை இருந்துள்ளது. அது என்னவென்றால், விலங்குகள் மீது பிரியம் கொண்ட அவர் தானும் ஒரு விலங்காகவே மாறிவிட வேண்டும் என்ற ஆசைதான்.
நாய் உடை
நீண்ட கால ஆசையாக இருந்த விஷயத்தை நடைமுறைக்கு கொண்டு வர டோகோ திட்டமிட்டுள்ளார். அதன்படி, இதற்காக ஜெப்பெட் என்ற உடை தயாரிக்கும் நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளார். அங்கு நிஜமான நாய் போல தோற்றம் தரும் உடையை தயாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
12 லட்சம் செலவு
இந்நிலையில், ஜெப்பெட் நிறுவனம் நிஜ நாய் போல் காட்ச்சியளிக்கும் உடையை பிரத்யேகமாக தயாரித்துள்ளது. மேலும் இந்த நாய் உடை தயாரிக்க டோகோவிடம் அந்நிறுவனம் 12 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது.
வீடியோ வைரல்
இதனையடுத்து அந்த உடையை அணிந்து கொண்ட டோகோ நிஜமான நாய் போல தோற்றமலித்தார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…