மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயிலில் தனியார் அமைப்பு சார்பில் கடந்த மாதம் 31-ம் தேதி அழகு போட்டி நடைபெற்றது. இந்நிலையில், இந்த அழகு போட்டிக்கு சிறப்பு அழைப்பாளராகத் திரைப்பட நடிகை யாஷிகா ஆனந்த் கலந்து கொண்டுள்ளார். மேலும், அந்த அழகு போட்டிகளை துவக்கி வைத்துள்ளார்.
இதனைதொடர்ந்து, அழகு போட்டிக்கு வந்த் போட்டியாளர்கள் பாதுகாப்புக்கு வந்த காவல் துறையினரை ராம்ப் வாக் செய்ய சொல்லி வற்புறுத்தியுள்ளனர். இதனால், பாதுகாப்புக்கு வந்த பெண் காவலர்கள் உட்பட 5 காவலர்களும் ராம்ப் வாக் செய்துள்ளனர்.
மேலும், இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ராம்ப் வாக் செய்த சுப்பிரமணியன், ரேணுகா, அஸ்வினி, நித்திய சீலா, சிவனேசன் ஆகிய காவலர்களை பணியிட மாற்றம் செய்து நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…