மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் தீத்வாலா பகுதியில் பஞ்சவதி சவுக் என்ற இடத்தில் வசித்து வந்த தம்பதி அசோக் போஸ்லே (வயது 55) மற்றும் அவரது மனைவி விஜயா போஸ்லே (வயது 50). இவர்களது மகன் அன்மோல் போஸ்லே (வயது 37). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஒரு சகோதரியும் உள்ளார்.
இந்நிலையில், தனது சகோதரிக்கு, அன்மோல் போன் செய்து வீட்டுக்கு வரும்படி கூறியுள்ளார். அவர் வீட்டுக்கு சென்று பார்த்ததில், பெற்றோர் இருவரும் கொல்லப்பட்டு கிடந்துள்ளனர். அவர்களது உடல்களின் நடுவே அன்மோல் அமர்ந்து இருந்துள்ளார். மேலும் வீடு முழுவதும் ரத்த வாடை வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் தீத்வாலா காவல் நிலையத்தில் உள்ள போலீசுக்கு தகவல் அளித்துள்ளார்.
இதனையடுத்து மூத்த காவல் அதிகாரி ஒருவர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். உடல்களை மீட்டு ருக்மணிபாய் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு விசாரணை நடத்தினர். இதில், தம்பதியின் கழுத்தில் அன்மோல் குத்தி கொலை செய்துள்ளார் என தெரிய வந்துள்ளது. ஆனால், பெற்றோரை அன்மோல் கொலை செய்ததற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. இதனையடுத்து அன்மோலை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…