சென்னை: எத்தனை பேர் குறை சொன்னாலும், தேவர் மகன் திரைப்படம் காலத்தால் அழியாத காவியம் என இயக்குநர் மோகன்.ஜி புகழ்ந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மாமன்னன் திரைப்படத்தின் இசைவெளியிட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், கமலஹாசன் முன்னிலையில் தேவர் மகன் திரைப்படம் மனபிறழ்வை ஏற்படுத்திய திரைப்படம் என பேசியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, பேசுப்பொருளாகவும் மாறியது. இதற்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில் தேவர் மகன் குறித்து இயக்குநர் மோகன்.ஜி தனது டிவிட்டர் பக்கத்தில், தேவர் மகன் திரைப்படம், தமிழ் சினிமாவின் சிறந்த திரைக்கதைகளில் ஒன்று. 30வருடங்களை கடந்தும் இப்படிப்பட்ட தென்மாவட்ட அழமான கதையை இதுவரை யாரும் பதிவு செய்யவில்லை. எத்தனை பேர் குறை சொன்னாலும் காலத்தால் அழியாத காவியம் தேவர் மகன் திரைப்படம் எனப்பதிவிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…