உத்திரப் பிரதேசம்: கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள சஹாஜன்வான் பகுதியை சேர்ந்தவர் அவதேஷ் குப்தா (40). இவருக்கு திருமணமாகி ஆரவ், ஆர்யன் என்ற இரு மகன்கள் இருகின்றனர். அவதேஷ் மனைவி உயிரிழந்த நிலையில், 8 மாதத்திற்கு முன்னர் நீலம் என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார். இந்த பெண்ணுக்கும் ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது.
திருமணத்திற்கு அவதேஷ் அவரின் இரு மகன்கள், நீலம் அவரது மகள் அனைவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி இரவு நீலம் அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு போன் செய்து தனது கணவர் மற்றும் மகன்களை யாரோ ஒரு மர்ம கும்பல் கொலை செய்துவிட்டதாக புகார் அளிக்கவே, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கு கழுத்து அறுக்கப்பட்டு இறந்துகிடந்த அவதேஷ் குப்தா மற்றும் அவரது மகன்களை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறை மனைவி நீலம் மீது சந்தேகப் பார்வையை கொண்டு விசாரணை செய்தனர். அதன்படி, அப்பெண்ணிடம் 8 மணி நேரம் நடத்திய விசாரணையில் உண்மை வெளிவந்தது. அதாவது, அவதேஷ் குப்தா தனது சொத்தை முதல் மனைவியின் இரு மகன்களுக்கு தான் எழுதி வைக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
தனது மகளுக்கும் தனக்கும் சொத்து தராமல் எப்படி அவர்களுக்கு மட்டும் கொடுக்கலாம் என்ற ஆத்திரத்தில் இவர்கள் மூவரையும் கொன்றுவிட்டால் சொத்து முழுவதும் தனக்கே வந்துவிடும் என்று சதி திட்டம் போட்டு மூவரையும் கொடூரமாக கொலை செய்துள்ளார். தற்போது கொலை வழக்குப் பதிவு செய்து நீலத்தை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சொத்துக்காக 3 பேரின் உயிரை எடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…