நவம்பர் 8 ஆம் நாளான நாளை சந்திர கிரகணம் நிகழவுள்ள நிலையில், திருப்பதி கோவில் 11 மணி நேரம் மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
சந்திரகிரகணம் நாளைய தினத்தில் காலை 8.30 மணி அளவில் தொடங்கி இரவு 7.30 மணி வரை 11 மணி நேரம் நிகழ உள்ளது. இதனால், திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரதான கதவுகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல, அந்த நேரத்துக்கான இலவச தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியிட்ட நிலையில், தரிசன டிக்கெட்டுக்கான பரிந்துரை கடிதங்களும் ஏற்றுக் கொள்ளப்படாது. கிரகணம் முடிந்த பின் கதவுகள் திறக்கப்பட்டு கோவில்கள் சுத்தம் செய்யப்பட்ட பிறகே பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து, திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”தரிசன டிக்கெட்டுக்கான பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. ரூ.300 தரிசனமும் ரத்து செய்யப்பட்டு சந்திர கிரகணம் முடிந்ததும் இரவு 7.30 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு கோவில் சுத்தம் செய்யப்படும். அதன் பிறகே பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படுவார்கள்” எனக் கூறப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…