திராவிட மாடல் மற்றும் ஒன்றியத்தை தனது முகம் மற்றும் குரலோடு இணைத்து தமிழக முதல் ஸ்டாலின் பேசியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
ராணிப்பேட்டையில் 267 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்த ஊரை ராணிப்பேட்டை எனக் கூறுவதை விட காந்திப்பேட்டை எனக் கூறுவது தான் பொருத்தமாக இருக்கும் என கைத்தறி அமைச்சராக உள்ள காந்திக்கு புகழாரம் சூட்டினார்.
மேலும் பேசிய அவர், "ஒவ்வொரு தனிநபரின் கோரிக்கைகளையும் கேட்டுபெற அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். பெற்றோர்களைப் போல இந்த திமுக அரசு செயல்படவேண்டும் என்று நான் நினைக்கிறேன். மக்களின் அனைத்து தேவைகளையும் பார்த்து பார்த்து செய்வேன்.
நாங்கள் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறி எதிர்க்கட்சியினர் மட்டுமல்லாது சில உதிரி கட்சியினர் மற்றும் நான்தான் அடுத்த முதல்வர் என்று சொல்லிக்கொண்டு அநாதையாக அலைந்துக் கொண்டிருப்பவர்கள் எல்லோரும் பேசுகின்றனர். ஆனால் நாங்கள் நிறைவேற்றிய வாக்குறுதிகளை சட்டசபையிலேயே நான் பட்டியல் போட்டு குறிப்பிட்டுள்ளேன்.
வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் தான் நான் மக்கள் முன் கம்பீரமாக நிற்கிறேன். நான் விளம்பர பிரியராக இருப்பதாக சிலர் பேசுகிறார்கள். எனக்கு விளம்பரம் எதற்கு? இனிமேலும் எனக்கு விளம்பரம் தேவையா? 55 ஆண்டுகாலம் அரசியலில் இருக்கும் எனக்கு எந்த விளம்பரமும் தேவையில்லை.
நமது அரசின் திட்டங்கள் எதுவும் விளம்பரத்திற்காக செய்வது கிடையாது. அது மக்களின் நலனுக்காக செய்யப்படுவது. எனக்கு விளம்பரம் தேவையில்லை. ஏற்கனவே கிடைத்திருக்கும் புகழையும் பெருமையையும் காப்பாற்றினாலே போதும் என நினைப்பவன் நான்.
திராவிடமாடல் என்றால் காலமெல்லாம் எனது முகம்தான் மக்களுக்கு ஞாபகம் வரும். திராவிட மாடல் என்றால் என் முகமும், ஒன்றியம் என்று சொன்னால் என் குரலும் மக்களின் மனதில் எப்போதும் நினைவுக்கு வரும். அது போதும் எனக்கு." எனக் கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…