Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நேரமாயிடுச்சு.. அனுமதி கிடையாது.. கதறி அழுத டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள்!!

Sekar July 24, 2022 & 15:05 [IST]
நேரமாயிடுச்சு.. அனுமதி கிடையாது.. கதறி அழுத டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள்!!Representative Image.

தமிழகத்தில் இன்று குரூப் 4 தேர்வு நடைபெற்ற நிலையில், ஐந்து நிமிடங்கள் தாமதமாக வந்ததற்காக தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படாததால் தேர்வர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

தமிழகம் முழுவதும் பல லட்சம் பேர் பங்கேற்ற இந்த தேர்வில் திருவாரூரில் உள்ள வடபாதிமங்கலம் சோமசுந்தரம் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குரூப் 4 தேர்வு எழுதுவதற்காக ஏராளமானவர்கள் காலை முதல் வருகை தந்திருந்தனர். 

இந்நிலையில் காலை 9 மணிக்கு முன்னதாக அனைவரும் தேர்வு எழுதும் அறைக்குள் சென்று விட வேண்டும் என்கிற நிலையில் 9.05 மணிக்கு தேர்வு எழுத வந்தவர்களை தேர்வு எழுத காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த தேர்வர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர், தேர்வு விதிகளின்படி நேரம் முடிந்த பிறகு உள்ளே அனுமதிப்பதற்கு தங்களுக்கு அதிகாரம் இல்லை என்பதால் அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் எனக் கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். 

இதனால் தேர்வு எழுத வந்தவர்கள் வேறு வழியின்றி கண்ணீர் மல்க அங்கிருந்து சென்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்