செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா இன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டு வேட்டி சட்டையுடன் பங்கேற்றுள்ளார்.
மேலும் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்களில் நடைபெற உள்ள தொடக்க விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவுடன் பங்கேற்றுள்ளார்.
மாமல்லபுரத்தில் 188 நாடுகளைச் சேர்ந்த 2000 வீரர்கள் கலந்துகொள்ளும் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டித் தொடர் இன்று முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து முன்னணி சதுரங்க விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு போட்டியிட உள்ளார்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…