தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு குளிக்க தமிழகம் மட்டுமில்லாம இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவர். கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து இந்த அருவிக்கு நீர்வரத்து வரும் நிலையில், அப்பகுதி வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ச்சி அடைவர். அதிலும் கோடை மற்றும் விடுமுறை தினங்களில் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும்.
கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது, இதனையடுத்து தற்போது அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது, சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக குளித்து வந்தனர். இந்நிலையில் தேனீ மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மலை பெய்துவருவதால் அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்குதொடர்ச்சிமலை - வட்டகணல் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறை நிர்வாகம் தடை விதித்துள்ளது.. மேலும் நீர்வரத்து சரியான பிறகு அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…