Tamilnadu News Live : கோவை மாவட்டம் நல்லியன்குட்டைபுதூரை சேர்ந்த விவசாயி குப்புசாமி என்பவர் தனது வீட்டில் 7 மாடுகள் மற்றும் சில ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் குப்புசாமி வளர்த்து வந்த ஆடு சில நாட்களுக்கு முன்பு 4 குட்டிகளிட்டது.
இந்நிலையில், தாய் ஆட்டின் மடியில் போதிய அளவு பால் சுரக்காததால், ஆட்டுக்குட்டிகளின் பசியை போக்க குப்புசாமி தனது வீட்டில் வளர்த்து வந்த பசு மாட்டின் பாலை டப்பாவில் அடைத்து ஆடுகளுக்கு குடிக்க தொடங்கினார்.
இதையடுத்து, அந்த ஆட்டுக்குட்டிகள் மாட்டின் பாலை குடித்து வளர்ந்த நிலையில் தற்போது தானாக சென்று பசுமாட்டின் மடியில் பால் குடித்து பசியாற்றி வருகின்றன. இச்செயலை அந்த பசுமாடும் ஏற்றுக்கொண்டு ஆட்டுக்குட்டிகளை விரட்டி அடிக்காமல், தனது கன்றுக்குட்டிகள் போல அரவணைத்து கொள்கிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து விவசாயி குப்புசாமி கூறுகையில், “முதலில் ஆட்டுக்குட்டிகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று தான் பசும்பால் கொடுத்தேன். பின்னர் ஆட்டுக்குட்டிகள் நடக்க ஆரம்பித்த நிலையில் அதுவாகவே சென்று பசுமாட்டின் பாலை குடித்து பசியை தீர்த்து கொள்கின்றன. ஆட்டுக்குட்டி பால் குடித்த பின்னரே மீதி இருக்கும் பாலை கறந்து வருகிறேன்” என கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…