திருப்பதி ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றுவருவதால், தமிழகத்தில் இருந்து திருப்பதி செல்லும் இணைப்பில் உள்ள ரயில்களின் சேவை ஒரு மாதத்திற்கு ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருப்பதிக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு செல்கின்றனர். இதற்காக மின்சார ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையைப் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், திருப்பதி ரயில் நிலையத்தின் நடைமேடை உள்ளிட்ட இடங்களில் பராமரிப்பு மற்றும் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதனால், தமிழகத்தில் இருந்து திருப்பதி செல்லும் சில ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே இருமார்க்கத்திலும் நாள்தோறும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆகஸ்ட் 10ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மேலும் சில முக்கிய ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…