மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் தனியார் விமான பயிற்சி பள்ளிக்கு சொந்தமான பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது. புனேயில் உள்ள பாரமதி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், காத்பன்வாடி பகுதியில் நடந்த இந்த விபத்தில் பயிற்சி விமானி பாவனா ரத்தோட் காயமடைந்துள்ளார். இந்நிலையில், உடனடியாக அவர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மேலும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுதொடர்பாக அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…