Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தீவிரவாதிகளை நைய புடைத்து.. போலீசிடம் ஒப்படைத்த காஷ்மீரிகள்!!

Sekar July 03, 2022 & 12:04 [IST]
தீவிரவாதிகளை நைய புடைத்து.. போலீசிடம் ஒப்படைத்த காஷ்மீரிகள்!!Representative Image.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் இருவரை கைப்பற்றி நையப்புடைத்த பின்னர் கிராம மக்கள் ஜம்மு காஷ்மீர் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைப்பற்றப்பட்ட 2 தீவிரவாதிகளில் ஒருவன் மிகவும் தேடப்படும் பயங்கரவாதி என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜோரி மாவட்டத்தில் வசிப்பவரும், மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த ஐஇடி குண்டுவெடிப்புகளுக்கு மூளையாக செயல்பட்டவருமான லஷ்கர் இ தொய்பா கமாண்டர் தாலிப் ஹுசைன் மற்றும் தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த பயங்கரவாதி பைசல் அகமது தர் ஆகியோர் துக்சன் கிராமத்தில் பிடிபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அவர்களிடமிருந்து இரண்டு ஏகே தாக்குதல் துப்பாக்கிகள், ஏழு கையெறி குண்டுகள் மற்றும் ஒரு கைத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

இதற்கிடையே கிராம மக்களின் துணிச்சலுக்கு 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என காவல்துறை இயக்குநர் தில்பாக் சிங் அறிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்