Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அசுரவேகத்தில் மோதிய கார்.. தம்பதியினருக்கு நேர்ந்த சோகம்!!

Sekar August 21, 2022 & 13:52 [IST]
அசுரவேகத்தில் மோதிய கார்.. தம்பதியினருக்கு நேர்ந்த சோகம்!!Representative Image.

கேரளாவில் அசுரர் வேகத்தில் வந்த கார் ஒன்று இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில், இரு சக்கர வாகனத்தில் பயணித்த தம்பதியர் பல அடி உயரம் பறந்து விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் காதர் (40), நேற்று தனது மனைவி ஆஷாவை அழைத்துக் கொண்டு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். குத்திப்புரம் பகுதி அருகே சென்றுகொண்டிருந்தபோது, அசுர வேகத்தில் வந்த கார் ஒன்று இவர்களின் ஸ்கூட்டரின் மீது மோதியது. 

இதில் ஸ்கூட்டரில் இருந்த கணவனும், மனைவியும் ஆளுக்கொரு திசையில் அந்தரத்தில் பல அடி உயரத்துக்கு பறந்து சென்று விழுந்தனர். இதில் கணவன் அப்துல் காதர் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த ஆஷா மீட்கப்பட்டு கோட்டைக்கல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இந்த கோர விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் இன்று வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அதில் அப்துல் காதர் ஸ்கூட்டரை சரியாக ஓட்டிச் செல்வதும், வேகமாக வந்த கார் தனது பாதையில் இருந்து விலகி ஸ்கூட்டர் மீது மோதுவதும் பதிவாகியுள்ளது. 

காரின் உரிமையாளர் தலைமறைவாகியுள்ள நிலையில், போலீசார் அவரை தேடி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்