மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி இன்று தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினார்.
நக்வியின் ராஜ்யசபா உறுப்பினர் பதவி நாளையுடன் முடிவடையும் நிலையில், ஆறு மாத காலம் எம்பியாக இல்லாமலும் அமைச்சராக தொடரலாம் எனும் விதி இருந்த நிலையிலும் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
முன்னதாக இன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்தர் அப்பாஸ் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் ஆற்றிய பங்களிப்பை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.
பாஜக சார்பாக துணை ஜனாதிபதி தேர்தலில் முக்தர் அப்பாஸ் நக்வி களமிறக்கப்படுவார் என டெல்லி அரசியல் வட்டாரங்களில் கூறப்படும் நிலையில், முக்தர் அப்பாஸ் நக்வி பதவியை ராஜினாமா செய்துள்ளது அதை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் அமைச்சராக உள்ள மத்திய ஸ்டீல் துறை அமைச்சரின் ராஜயசபா எம்பி பதவிக்காலமும் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், அவரும் இன்று தனது ராஜினாமாவை பிரதமர் மோடியிடம் சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…