சொந்த தங்கையை அக்காவே திட்டமிட்டு பலரால் பாலியல் வன்கொடுமை செய்யவைத்து படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் தான் கொடூரம் அரங்கேறியுள்ளது. அந்த பகுதியைப் சேர்ந்த 19வயதான இளம் பெண் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை வீட்டுகுத் தெரியாமல் காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், அவரது 12 வயது தங்கைக்கு இந்த காதல் விவகாரம் தெரிய வரவே, அவர் பெற்றோரிடம் இதை கூறிவிட்டார். மகளின் காதல் குறித்து அறிந்த பெற்றோர் காதலை கைவிடுமாறு கூறி கண்டித்துள்ளனர். இதனால் 19 வயது அக்கா 12 வயது தங்கை மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.
மேலும் தன்னை போட்டுக்கொடுத்த தனது தங்கைக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என நினைத்த அக்கா அதற்காக செய்த செயல் தான் இதில் கொடூரமானது. வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் தனது தனது தங்கையை அருகில் இருந்த கரும்பு காட்டிற்கு கூட்டிச் சென்றுள்ளார். அங்கு வைத்து அந்த கிராதக அக்கா தான் காதலித்த நபர் மற்றும் அவரது ஆண் நண்பர்கள் 5 பேருக்கு இரையாக்கியுள்ளார்.
அந்த ஆறு கொடூரன்களும், கிராதக அக்கா முன்பே தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து, சிறுமியின் துப்பட்டாவை வைத்து கழுத்தை நெரித்து படுகொலை செய்துள்ளனர். பின்னர் அந்த அக்கா தனக்கு எதுவும் தெரியாதது போல் வீட்டிற்கு வந்து விட்டார்.
எனினும் சிறுமியை காணாத அவரது பெற்றோர் தேடிப்பார்த்தபோது கரும்புக் காட்டுக்குள் சிறுமி சீரழிக்கப்பட்டு இறந்து கிடப்பது தெரியவந்து. பின்னர் வந்த போலீசார் தங்கள் பாணியில் விசாரிக்க அக்காவின் கொடூர செயல் தெரியவந்துள்ளது.
இதையடுத்து இந்த கொடூரத்திற்கு சதித்திட்டம் தீட்டிய அக்கா மற்றும் கொடூரத்தில் ஈடுபட்ட 6 கயவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். தங்கை மீதான கோபத்தில் அக்காவே இதுபோன்ற கொடூரத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…