ஒரே வாரத்தில் சுமார் 65 மில்லியன் அளவிலான நோய்த்தொற்றுக்கள் உருவாகும் என வெளியிடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அறிக்கையின் படி, சமீபத்திய ஒமிக்ரான் மாறுபாடுகளுக்கு எதிராக போராடுவதற்கு தடுப்பூசிகளை அதிகரிக்க விரைகின்றனர். கடந்த ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் இருந்து, கொரோனா வைரஸ் மாறுபாடு XXB ஆனது நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகியது. இந்த நோய் தொற்றானது மே மாத இறுதி வாரத்திற்குள் 40 மில்லியன் நோய்த் தொற்றுக்கள் ஏற்பட உள்ளதாகவும், ஒரு மாதத்திற்குப் பின், 65 மில்லியனாக உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
1.4 பில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நாட்டில், கோவிட் ஜீரோ தடைகளை அரசு அதிகாரிகள் திடீரென அகற்றியதால், கிட்டத்தட்ட 6 மாதங்களுக்குப் பின் மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்திருக்கிறது. மேலும், நாட்டில் புதிய அலை எவ்வாறு வெளிவரக்கூடும் என்பதற்கான நுண்ணறிவை நோய் நிபுணர் வழங்கிய மதிப்பீடு வழங்கி உள்ளது.
இதற்காக புதிய தடுப்பூசிகளை வெளியிட அதிகாரிகள் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…