உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 3 வயது சிறுமி தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தது.
உத்திரப் பிரதேசத்தில் உள்ள கிராமம் ஒன்றில், வீட்டின் ஓலை கூரை தீப்பிடித்து எரிந்ததாகக் கூறப்படுகிறது. இதில் 3 வயது சிறுமி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போலீஸ் சூப்பிரண்ட் ஒருவர் தெரிவித்ததாவது, பகதூர்பூர் கிராமத்தில் ராம்பாபு என்பவரின் வீட்டின் ஓலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், ராம்பாபுவின் மூன்று வயது மகள் நந்தினி கூரையில் தூங்கி கொண்டிருந்தார்.
தீ வேகமாக பரவிய நிலையில், அக்கம் பக்கத்தினர் விரைந்து தீயை அணைக்க முயற்சித்துள்ளனர். ஆனால், தீ கட்டுப்பாட்டுக்குள் வருவதற்குள் சிறுமியும், அருகே கட்டப்பட்டிருந்த பசுவும் தீயில் கருகி இறந்தது.
சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…