உடல்நலக்குறைவு காரணமாக துபாயில் சிகிச்சை பெற்று வந்த பர்வேஸ் முஷாரப் இன்று இயற்கை எய்தினார். இவருக்கு வயது 79.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் துபாயில் இன்று காலமானார். இவர் உடல் நலக்குறைவு காரணமாக, துபாயில் உள்ள அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
இவர், கடந்த 1943 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் நாள் டெல்லியில் பிறந்தார். இவரது தனது ஆரம்பக் கல்வியை கராச்சியில் உள்ள செயின்ட் பேட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். இதனைத் தொடர்ந்து, ஃபார்மன் கிறிஸ்டியன் கல்லூரியில் உயர் கல்வியைத் தொடங்கினார்.
அதனைத் தொடர்ந்து, இவர் அமிலாய்டோசிஸ் எனப்படும் மருத்துவ நிலை காரணமாக சிக்கல்கள் எழுந்தது. இது ஒரு அரிய நோய் ஆகும். இந்த நோயினால் உடலில் உள்ள பல்வேறு திசுக்களில் சில வகையான புரதங்களின் அசாதாரண படிவுகள் ஏற்படும். இது உறுப்பை செயலிழக்க வழிவகுக்கிறது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…