தென்மேற்கு பருவ மழை காரணமாக மஹாராஷ்டிரா, அசாம், தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில், கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு கிராமங்களும் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன.
ஆந்திர மாநிலத்தில் கோதாவரி ஆறு பாயும் 6 மாவட்டங்களில் 300க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 62 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் 220க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சீதா நகரம் மண்டலத்திற்கு உட்பட்ட புருஷோத்தம்பட்டினத்தில் ஆற்றங்கரையோரத்தில் உள்ள துர்க்கையம்மன் கோவில் திடீர் வெள்ள பெருக்கால் மூழ்கும் சூழல் ஏற்பட்டது. இதனை முன்னிட்டு கோவில் நிர்வாகிகள், மக்கள் யாரும் கோவிலில் இருக்க வேண்டாம் என்றும் உடனடியாக கோவிலில் இருந்து வெளியேறும் படியும் எச்சரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அங்கிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
மக்கள் அனைவரும் வெளியேறிய சற்று நேரத்தில் வெள்ளம் அதிகமாக வந்து கோவிலை அப்படியே நீரில் அடித்து சென்றது. எந்த பாதிப்பு ஏற்பட வில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வனதுர்க்கை அம்மன் கோயில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…