ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன. அதே ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 100வது நாள் போராட்டம் நடைபெற்றது.
அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசாரால் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்து, மே மாதம் 28-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூட விதித்த தடையானது தொடரும் என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கக் கோரி வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இதனிடையே கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய இடைக்கால அனுமதி வேண்டும் என வேதாந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அதி விசாரித்த நீதிமன்றம் 3 மாதங்களுக்கு மட்டும் அனுமதி அளித்தது.
மேலும் அதனை தொடர்ந்து ஆலையில் உள்ள இயந்திரங்கள் துரு பிடிக்கிறது என கூறி பராமரிப்பு செய்ய அனுமதி வேண்டும் என மனு ஒன்றை தாக்கல் செய்தது, அதனை விசாரித்த நீதிபதிகள் அபாரதத்துடன் மனுவை தள்ளுபடி செய்தனர்.
இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்க வேதாந்தா நிறுவனம் முடிவு செய்துள்ளது. அரசு உத்தரவால் தொடர்ந்து ஆலை மூடப்பட்டு இருக்கும் நிலையில் அதனை வாங்க விரும்புவோர் ஜூலை 4ஆம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…