நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் நீண்ட காலமாக உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அவ்வப்போது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். இதன் காரணமாக சில ஆண்டுகளாக அரசியல் கூட்டங்களில் பங்கேற்காமல், படங்களில் நடிக்காமல் இருந்துவருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் விஜயகநாந்தின் கால் விரல்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக தேமுதிக வெளியிட்டிருந்த அறிவிப்பில், நீண்ட வருடங்களாக இருக்கும் நீரழிவு பிரச்சனையால் (சர்க்கரை நோய்) தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி விரல் அகற்றப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
குடியரசு தலைவர் தேர்தல் வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளராக களமிறங்கும் திரவுபதி முர்மு கூட்டணி கட்சியினரை சந்தித்து தனக்கு ஆதரவுகோர தமிழகம் வந்திருந்தார். அந்த கூட்டத்தில், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, அதிமுக சார்பில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் தனித்தனியே தங்களது ஆதரவுகளை வழங்கினர். மேலும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் ஒரு பெண் வேட்பாளராக திரவுபதி முர்முவுக்கு பெண் சமுதாயத்தின் சார்பாக வாழ்த்துகள். நல்ல வேட்பாளரை தேர்வு செய்த பிரதமருக்கு வாழ்த்துகள் என தனது ஆதரவை கூறினார். மேலும் பேசிய அவர் விஜயகாந்த் உடல்நிலையில் தொய்வு ஏற்பட்டுள்ளது உண்மை. அவரை அவ்வப்போது மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். ஊடகங்கள் அதனை பெரிதுப்படுத்த வேண்டாம். எங்கள் நிலையை புரிந்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…