தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக உள்ளது. இதனால், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலிலும் மழை பெய்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன் படி, மயிலாடுதுறை மாவட்டத்தில், சீர்காழியில் 44 செ.மீ, கொள்ளிடத்தில் 32 கி.மீ என்ற கணக்கில் மழை பதிவாகியுள்ளது. மேலும், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 31 செ.மீ மழையும், சிதம்பரம் AWSல் 27 செ.மீ மழையும், பதிவாகியுள்ளது. இதனை அடுத்து, காங்கேயம், பொன்னமராவதி, வெள்ளக் கோவில், லால் பேட்டை, மிலம்பட்டி, அரவக்குறிச்சி, உளுந்தூர் பேட்டை, வேடசந்தூர் போன்ற பல்வேறு பகுதிகளில் மழை 10 முதல் 15 செ.மீ வரை பெய்ததாக பதிவாகியுள்ளது.
இதனால், வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சீர்காழியில் அதிக அளவு பெய்த கனமழையால், சாலைகள் முழுவதும் வெள்ளக் காடாக காட்சி அளிக்கின்றன. மேலும் பல இடங்களில் ஏரிகளாகவும், அவற்றில் இருக்கும் வீடுகள் மிதக்கும் வீடுகள் போலவும் காட்சியளிக்கின்றன. மிகக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. தற்போது வரலாறு காணாத மழை பெய்து வருவதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, நடிகை த்ரிஷா வீட்டிலும் மழை தண்ணீர் புகுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், பல்வேறு இடங்களில் தொடர்ந்து விடாமல் மழை பெய்யும் எனவும் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…