Tamilnadu News Live : தமிழகத்தில் தஞ்சாவூரை சேர்ந்த விவசாயி வயலில் நெற்கதிர்களின் இடயே திருவள்ளுவரின் உருவத்தை வரைந்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் பண்பாடு, கலாச்சாரத்தில் முக்கியமானவையாக சொல்லப்படும் தமிழ் மொழியும், விவசாயமும் தான். இந்நிலையில் இந்த இரண்டையும் போற்றும் வகையில் தஞ்சாவூரை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது வயலில் திருவள்ளுவர் உருவத்தை வரைந்துள்ளார்.
இதனையடுத்து, தஞ்சாவூர் மயிலாம்பட்டியை சேர்ந்த விவசாயி இளங்கோவன் என்பவர் தனது வயலில் உள்ள நெற்கதிர்கள் இடையே மாற்று விதைகளையும் பயிரிட்டுள்ளார். இதை உயரத்திலிருந்து அதாவது கழுகுப்பார்வையில் பார்க்கும்போது வயலுக்கு நடுவே திருவள்ளுவரின் உருவம் தெரிகிறது.
மேலும், இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்கலில் வைரலாகியுள்ளது. தமிழகம் உட்பட பல மாநில மக்கள் விவசாயி இளங்கோவுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…