மதக்கலவரத்தை தூண்டியதாக குற்றம் சுமத்தப்பட்டதில், பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி கைது செய்யப்பட்டார். சமூக வலைத்தள பக்கத்தில் மதக்கலவரத்தை தூண்டும் விதத்தில் இவர் தொடர்ந்து பதிவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.
பாஜகவின் செயற்குழு உறுப்பினராக செயல்பட்டுவரும் சவுதாமணி, அவரது ட்விட்டர் பக்கத்தில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவரது இந்த நடவடிக்கைக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.
மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய அவரை கைது செய்யவேண்டும் என சமூக வலைத்தளங்களை கோரிக்கைகள் எழுந்த நிலையில் அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாருக்கு முன்ஜாமீன் வேண்டும் என சவுதாமணி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்நிலையில், சென்னை சூளைமேட்டில் உள்ள சவுதாமணி வீட்டில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சவுதாமணியை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…