ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால், உக்ரைனை ஒருபோதும் தாக்கியிருக்க மாட்டார் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
ரஷ்யாவிற்கு உக்ரைனுக்கும் இடையே நடந்துவரும் போரால் ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகளும் விதித்து வருகின்றனர். இந்நிலையில், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால், வெறித்தனமான மற்றும் கட்டாயப் போரைத் தொடங்கியிருக்க மாட்டார் என்று கூறியுள்ளார்.
ஜி-7 உச்சிமாநாட்டின் முடிவில் ஜெர்மனியின் ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர் ரஷ்ய-உக்ரைன் போருக்கு விளாடிமிர் புடின் தனது பலத்தை வெளிப்படுத்தியதே முக்கிய காரணங்களில் ஒன்று என்று போரிஸ் ஜான்சன் கூறினார். உலக அமைதிக்கான ஒரு படியாக அதிக பெண்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். "புடின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால், அவர் ஒரு வெறித்தனமான மற்றும் பலவந்தமான தாக்குதலைச் செய்து இந்த வகையான வன்முறையைச் செய்திருப்பார் என்று நான் நினைக்கவில்லை" என்று ஜான்சன் கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…