இலங்கையில் தினமும் 15 மணி நேர மின்வெட்டு கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பல துயரங்களை சந்தித்து வரும் அந்த நாட்டு மக்களின் தலையில் இது மிக பெரிய இடியாக விழுந்துள்ளது.
மிகப்பெரிய பொருளாதார சரிவில் சிக்கியிருக்கும் இலங்கை மக்களின் தொடர் போராட்டங்களுக்கு பின் அந்த நாட்டின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். இதனையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விளக்க வேண்டும் என அந்த நாட்டு மக்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் விநியோகம், பொதுமக்களுக்கு இல்லை என்ற விதிமுறை கடந்த திங்கட்கிழமை முதல் அமலில் உள்ளது. இந்தத் தடை இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பட்டினியுடன் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் நிலையில், அடுத்த அடியாக மின்வெட்டுத் தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் 10 முதல் 15 மணி நேர மின் வெட்டை அமல்படுத்த வாய்ப்புள்ளதாக, இலங்கை மின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது. எரிபொருள் மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால், மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் 15 மணி நேர மின் வெட்டு உறுதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…