திருவெண்ணைநல்லூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு கூலி தொழிலாளர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவெண்ணெய்நல்லூர் அருகே கொங்கராயனுர் தரைபாலத்தின் மேல் இருசக்கர வாகனத்தில் சென்ற கார்த்திகேயன், ரகு, காத்தவராயன் ஆகிய மூவரும் டி.எடையார் கிராமத்தில் உள்ள ஞானசீலன் என்பவர் கட்டி வரும் புதிய வீட்டிற்கு கொத்தனார் வேலையை செய்ய சென்றுள்ளனர்.
நேற்று மாலை கொங்கராயனூரில் இருந்து அருளவாடி செல்லும் தென்பெண்ணை ஆற்று தரைப் பாலத்தை இரண்டு இருசக்கர வாகனங்களில் நடந்தபடியே தரைப்பாலத்தைக் கடக்க முயன்றுள்ளனர். அப்ப்போது வலுக்கி விழுந்ததில் இரண்டு இருசக்கர வாகனத்தில் இருந்தவர்களும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அதில் கார்த்திகேயன் என்பவரை மட்டும் அருகே இருந்த கொங்கராயனூர் கிராமத்தினர் மீட்ட நிலையில், காத்தவராயன் மற்றும் ரகு இருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் இருவரையும் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…