உதகை அருகே கோவில் தீப விழாவிற்கு சென்ற 4 பெண்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து சென்று சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உதகை அருகே உள்ள சீகூர் வன பகுதியில் பிரசித்தி பெற்ற ஆனிக்கல் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் விசேஷ நாட்களில் மட்டுமே திறக்கபடுவது வழக்கம். இந்த நிலையில் இன்று கார்த்திகை தீபம் திருவிழாவிற்காக கோவில் திறக்கபட்டு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து உதகை, கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதியை சார்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தனர்.
கோவிலுக்கு செல்லும் வன பகுதியில் ஓடும் ஆனிக்கல் ஆற்றில் காலை குறைந்த அளவு தண்ணீர் ஓடிய நிலையில் மதியத்திற்கு மேல் மலை பகுதியில் பெய்த கன மழை காரணமாக காட்டாற்று வெள்ளம் வெள்ளம் ஏற்பட்டது.
இதனையடுத்து பக்தர்கள் ஒவ்வொருவராக ஆற்றை கடக்க முயன்ற போது உதகை ஜெக்கலொரை கிராமத்தை சார்ந்த சரோஜா(65), வாசுகி(45), விமலா(35) மற்றும் சுசிலா(56) ஆகிய 4 பெண்கள் வெள்ளத்தில் அடித்து சென்று மாயமாகினர்.
அதனை பார்த்த மற்ற பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக சீகூர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் என அனைவரும் சேர்ந்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
இரவு நேரம் என்பதாலும் ஆற்றால் தொடர்ந்து அதிகமான தண்ணீர் ஓடுவதாலும் மாயமான 4 பேரின் உடல்களை தேடும் பணி காலை முதல் மீண்டும் தொடர தீயணைப்பு துறையினர் முடிவு செய்துள்ளனர். கோவிலுக்கு வந்த 4 பெண் பக்தர்கள் காட்டற்று வெள்ளத்தில் அடித்து சென்று மாயமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…