Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கள்ளக்காதல் கேக்குதோ.. ஆந்திராவில் காதலரின் ஆணுறுப்பை அறுத்த காதலி!!

Sekar September 19, 2022 & 14:35 [IST]
கள்ளக்காதல் கேக்குதோ.. ஆந்திராவில் காதலரின் ஆணுறுப்பை அறுத்த காதலி!!Representative Image.

ஆந்திராவின் பிரகாஷம் மாவட்டம் கொண்டாபியில், வேறொரு பெண்ணுடன் கள்ள உறவு வைத்திருந்ததற்காக பெண் ஒருவர் தனது காதலரின் ஆணுறுப்பை அறுத்து வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கொண்டபி மண்டலத்தின் முகசிந்தலா கிராமத்தில் வசிக்கும் சாகந்தி ஹரிநாராயணா (58) என்பவர் விவசாய வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த சாகந்தி பத்மா என்பவருடன் திருமணம் செய்யாமல் உறவில் இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில், பத்மாவுக்கு ஹரிநாராயணா வேறு ஒரு பெண்ணுடன் கள்ள உறவு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், ஹரிநாராயணா வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, பத்மா அவரது பிறப்புறுப்பை பிளேடால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். 

பிறப்புறுப்பு வெட்டப்பட்டதால் ஏற்பட்ட வலியால் ஹரிநாராயணா அலறி கூச்சல் போடவே, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, கொண்டபி அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஓங்கோல் ரிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்