ராஜஸ்தானில் மனைவி ஒருவர், கணவரின் பிறப்புறுப்பை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்மான் மாநிலத்தில் பார்மரில், கணவன், மனைவி இருவருக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. இந்த சண்டைக்குப் பிறகு தூங்கச் சென்ற கணவரின் அந்தரங்க உறுப்புகளை அவரின் மனைவி துண்டித்துள்ளார். இந்த சம்பவம் டோரிமன்னா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலிசார் கிராமத்தில் நடந்துள்ளது.
இதில், இரவு நேரத்தில் மனைவி தொலைபேசியிடம் பேசிக் கொண்டிருந்ததால், அதனைத் தட்டி கேட்டதால் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்த புகாரில் தெரிவிக்கப்பட்டதாவது, இவர் இரவு தூங்கிக் கொண்டிருந்ததாகவும், அவரது மனைவி போனில் பேசிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இது அவருக்கு இடையூறாக இருந்ததால், அழைப்பை துண்டிக்கும் படி கூறியதால் அவர்கள் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.
இதனால், ஆத்திரமடைந்த அந்தப் பெண், இரவில் தூங்கிக் கொண்டிருந்த அவளது கணவரின் அந்தரங்க உறுப்புகளை வெட்டியுள்ளார். இதில் வலி தாங்க உடியாமல் அலறி துடித்த அவரைக் குடும்பத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 6 மாதங்களே ஆன நிலையில், இருவரும் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்துள்ளனர். அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும், கடந்த காலங்களில் அவர் மீது வரதட்சணை கொடுமை வழக்குப் பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…